Skip to main content

பத்தடியே போதும்..

கிராமம் ஒன்றை அடுத்து உயரமான மலை இருந்தது. அதில் மரங்கள் வளர்ந்து இருண்ட காடாக இருந்தது. நகரவாசி ஒருவர் தன் ஆராய்ச்சிக்காக மலை உச்சிக்குச் செல்ல வேண்டியதாக இருந்தது.

பகல் வேளையில் இந்த மலையில் ஏறுவது மிக சிரமம். இதனால் அந்த நகரவாசி  இரவு வேளையிலேயே கையில் விளக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.. கிராமத்தின் எல்லையில் அவர் நின்று விட்டார்.

அவன் கையில் உள்ள விளக்கின் வெளிச்சம் பத்தடி தூரத்திற்கு தான் தெரிந்தது. அதற்கு பின்னால் எல்லாம் இருட்டாகத் தெரிந்தது. அவனுக்கு ஒரு சந்தேகம்.

இந்த பத்தடி தூரத்திற்குத் தானே விளக்கின் வெளிச்சம் தெரிகிறது ? இதை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் எப்படி மலையேற முடியும் ? என்று யோசித்தார்

அப்போது அங்கு ஒரு  பெரியவர் அதை விட சிறிய விளக்குடன் அங்கு வந்தார். அவரும் மலையேற வந்துள்ளதாக கூறினார்.

நகரவாசி அந்த பெரியவரிடம்  தன் சந்தேகத்தை
கேட்டப் போது,

பெரியவர் சிரித்தப்படி,"விளக்கு தரும் வெளிச்சத்தில் நீ பத்தடி தூரம் முதலில் முன்னேறு, பின் அவ்வாறு முன்னேறிய நிலையில், இதே விளக்கின் வெளிச்சம் மேலும் பத்தடி தூரத்திற்கு தெரியும்.

அவ்வாறே எத்தனை கிலோ மீட்டர் வேண்டுமானாலும் நீ மலையேறிச் செல்லலாம்." என்றார்...

ஆம்.,நண்பர்களே..,

*நீண்ட காலத் திட்டம் போடும் போது, நமக்கு முன் உள்ள சின்ன, சின்ன தடங்களைப் பொருட்படுத்தக் கூடாது.*

அவைகளை மறந்து விடவேண்டும்.எல்லாவற்றையும் போட்டு குழப்பினால் நாம் எண்ணிய செயலை முடிக்க இயலாமல் போகும்...


Comments

  1. Wishing everyone a blessed day ahead..

    ReplyDelete
  2. Dear admin mam, pg trb feb 12 irukuma, ila podtpone aguma mam reply

    ReplyDelete
    Replies
    1. Ipo iruka situation la conduct panradhu kastam.. So 31st kulla corona number of cases innum increase agita nichayama postpone dhan agum..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..