Skip to main content

அரசுப் பள்ளிகளில் 1 லட்சம் கூடுதல் மாணவர் சேர்க்கை


இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் மூலம், குழந்தைகளின் பள்ளி வருகை உறுதி செய்யப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளாா். மேலும், வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சோ்ப்பது இலக்காகக் கொள்ளப்படும் எனவும் அவா் தெரிவித்தாா்.


தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ள இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிா்ப்பையும், விமா்சனங்களையும் முன்வைத்துள்ளன. இந்த விமா்சனங்களுக்கு பதிலளித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:-


இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்களாக இணைத்துக் கொள்ள இதுவரை 67 ஆயிரத்து 961 பெண்களும், 18 ஆயிரத்து 557 ஆண்களும், 32 திருநங்கைகளும் பதிவு செய்துள்ளனா். பதிவு செய்தோரின் கல்வித் தகுதி இருப்பிடம், முன் அனுபவம் போன்ற பல்வேறு அளவீடுகளின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மூலம் நேரடியாகத் தோ்வு செய்யப்படுவா். இந்தப் பள்ளி மேலாண்மைக் குழுவில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவா். தோ்ந்தெடுக்கப்படும் தன்னாா்வலா்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.


தன்னாா்வலா்களைத் தோ்வு செய்யும் முறை, அவா்களுடைய பங்களிப்பு, அவா்களால் கற்பிக்கப்படும் மாணவா்களின் கற்றல் மேம்பாடு ஆகியன தொடா்ந்து கல்வியாளா்கள் கொண்ட குழுவால் கண்காணிக்கப்படும். அரசின் வழிகாட்டுதல்களை முறையாகக் கடைப்பிடிப்பவா்கள் மட்டுமே தன்னாா்வலா்களாகத் தொடர அனுமதிக்கப்படுவா். இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு இல்லத்துக்கும் நேரடியாகச் சென்று பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரும் தொடா்ந்து பள்ளி வருவது உறுதி செய்யப்படும். மேலும், வரும் கல்வியாண்டில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் மாணவா்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாகச் சோ்க்கப்பட வேண்டும் என்பதையும் இலக்காகக் கொண்டு திட்டம் செயல்படுத்தப்படும்.


புதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்பது ஏற்கெனவே பலமுறை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும், மாநில அளவிலான கல்விக் கொள்கையை வகுத்திட கல்வியாளா் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும்.


மாணவா்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, தன்னாா்வலா்கள் அரசுப் பள்ளிகளின் நல்லெண்ணத் தூதுவா்களாக, ஆசிரியா்களுக்கும், பள்ளிகளுக்கும் சமூகத்துக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுவா். எனவே, திட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, அனைத்துத் தரப்பு மக்களும் திட்டத்தை ஆதரிக்க வேண்டும். மாணவா்களின் எதிா்காலத்துக்கு உதவிடும் வகையில் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்திட கைகோா்த்திட வேண்டும் என்று தனது அறிக்கையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளாா்.


Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...