Skip to main content

TODAY'S THOUGHT..

 மன்னர் அசோகர் ஒரு முறை வேட்டைக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு எதிரில் ஞானத்துறவி ஒருவர் வந்து கொண்டிருந்தார்..

மன்னரும் அவரது ஆட்களும்
செல்ல வழிவிட்டு, ஓர் ஓரமாக
துறவி ஒதுங்கி நின்றார்.

அசோகக் சக்கரவர்த்தி அவரைப் பார்த்து விட்டார்.

உடனே தமது ரதத்தை நிறுத்திவிட்டு, 
இறங்கிச் சென்று துறவியின் காலில் நெடுஞ்சாண கிடையாக விழுந்து வணங்கினார்..

அவரது சிரம் (தலை) துறவியின் காலில் பட்டது.

துறவி தமது கைகளை உயர்த்தி மன்னனை ஆசிர்வதித்தார்..

இதைப் பார்த்துக்
கொண்டிருந்த அமைச்சர்
சங்கடப்பட்டார் *"ஒரு மன்னன் ஒரு பரதேசியின் காலில் விழுவதா? அரச பாரம்பரியக் கவுரவம் என்னாவது?'*
என்ற எண்ணம் அவரை அலைக் கழித்தது.

அரண்மனைக்கு சென்றதும்.. அரசரிடம் தமது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

அமைச்சரின் பேச்சைக் கேட்ட அசோக மன்னர்
சிரித்தார்.

அமைச்சரின் கேள்விக்குப்
பதிலளிக்காமல்,
_ஒரு விசித்திர கட்டளையைப் பிறப்பித்தார்_ *"ஒரு ஆட்டுத் தலை, ஒரு புலித்தலை, ஒரு மனிதத் தலை, மூன்றும் எனக்கு உடனே வேண்டும் ஏற்பாடு செய்யுங்கள் அமைச்சரே,''*
என்றார்.

மன்னரின் கட்டளை அமைச்சரைத் திகைக்க வைத்தது.. _எனினும் அரச கட்டளையாயிற்றே!_ _அதை நிறைவேற்ற ஏவலர்கள் நாலாபக்கமும் பறந்தனர்.._

*ஆட்டுத்தலை கிடைப்பதற்கு அதிகச் சிரமம் இருக்கவில்லை.*
*ஓர் இறைச்சிக் கடையில் அது கிடைத்து விட்டது.*

புலித் தலைக்கு அலைந்தனர்.
*அது ஒரு வேட்டைக்காரனிடம் கிடைத்தது.*
_அன்றுதான் அவன் ஒரு புலியை வேட்டையாடியிருந்தான்._

_மனிதத் தலைக்கு எங்கே போவது?_ _*கடைசியில் சுடுகாட்டிற்குச் சென்று ஒரு பிணத்தின் தலையை எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தனர்..*_

மூன்றையும் பார்த்த அசோக மன்னர் தன் அமைச்சரிடம், *"இம்மூன்றையும் சந்தையில் விற்று வாருங்கள்.''* என்றார்.

_மன்னரின் கட்டளைப்படி சந்தைக்குச் சென்றவன் திணறினான்._

*ஆட்டுத் தலை அதிகச் சிரமமின்றி விலை போனது.*

_புலியின் தலையை வாங்க ஆளில்லை._ _பலர் அதை வேடிக்கைத் தான் பார்த்தனர்._
*_கடைசியில் ஒரு வேட்டைப் பிரியர் அதனை தன் வீட்டில் அலங்காரமாக மாட்டி வைக்க வாங்கிக்கொண்டார்._*

_மீதமிருந்த மனிதத் தலையைப் பார்த்த கூட்டம் அருவருப்புடன் அரண்டு மிரண்டு பின் வாங்கியது._
*ஒரு காசுக்கு கூட அதை வாங்க யாரும் முன்வரவில்லை..*

அரண்மனை திரும்பிய அமைச்சர் *ஆட்டுத் தலை உடனே விலை போனதையும்,* *_புலித்தலை சற்றுச் சிரமத்துடன் விலை போனதையும்,_* *மனிதத் தலையை வாங்க ஆளில்லை..* என்பதையும் தெரிவித்தார்.

*"அப்படியானால் அதை யாருக்காவது இலவசமாகக் கொடுத்து விடுங்கள்!''* என்றார் அசோகர்.

*இலவசமாகக் கூட அதனை வாங்கிக் கொள்ள யாருமே முன்வரவில்லை.*

இப்போது அசோக மன்னர் கூறினார்...
*"பார்த்தீரா அமைச்சரே! மனிதனின் உயிர் போய்விட்டால், இந்த உடம்பு கால் காசுகூடப் பெறாது.*
*_இலவசமாகக் கூட இதனை யாரும் தொடமாட்டார்கள்._*
*இருந்தும் இந்த உடம்பு உயிர் உள்ள போது என்ன ஆட்டம் ஆடுகிறது!*
_*செத்த பின்பு நமக்கு மதிப்பில்லை என்பது நமக்குத் தெரியும்.*_
*_ஆனால், உடலில் உயிர் இருக்கும்போது, தம்மிடம் எதுவும் இல்லை என்று உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்._*
*அத்தகைய ஞானிகளை விழுந்து வணங்குவதில் என்ன தவறு?* *_சொல்லப்போனால் அதுதான் ஞான வாயிலின் முதல் படி! '_*
என்றார்.

*தன் தவறை உணர்ந்தார் அமைச்சர்..*


*பணிந்தவர்களும், துணிந்தவர்களும் வாழ்வில் தோற்றதாக சரித்திரம் இல்லை.*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam ippo kandippa tet certificate pathiya venduma yen mam

    ReplyDelete
  3. Hi admin sister tet certificate register pannunga nu ellathiliyum mrg varuthu ithanala use iruka.already ithey news 2016 layum vanthuthu but register panna oru use hmm illa enpathu unmai.unka opinion enna

    ReplyDelete
  4. Dear Unknown friends..

    Edhukkum register panni vachukonga fri, because incase DMK vandhuta adhuku mark nu sonnalum soluvanga..

    ReplyDelete
  5. Admin mam ippo register panna intha year dhane seniority fix pannuvaanga, passed year ah seniority fix pannuvaanga ,nan doubt la dhane idha ketgirane mam

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..