*எல்லாம் ஒழுங்காக நடக்க, நீங்கள் நம்பிக்கையோடு இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை.*
*எதுவுமே ஒழுங்காக நடக்காதிருக்கும் போதும்,* *நீங்கள் தைரியமாக வாழ்ந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*நீங்கள் நினைப்பதெல்லாம் உங்களுக்கு நடக்க நீங்கள் பலமாக உணர்ந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*நீங்கள் நினைக்காத பயங்கரங்கள் உங்களுக்கு நடந்தாலும் நீங்கள்* *அசராமலிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*உற்றாரும் பிறரும் உங்களுக்கு உதவி செய்ய,*
*நீங்கள் நிதானமாக இருந்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*உங்களுக்கு உதவ யாருமே*
*தயாராக இல்லாத சமயத்திலும்*
*நீங்க பக்குவத்தோடிருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*எல்லோரும் உங்களைக்கொண்டாட, நீங்கள் சந்தோஷமாக*
*இருந்தால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*எல்லோரும் உங்களை அவமதித்து ஒதுக்கித் தள்ள*
*அவர்கள் முன் ஜெயிக்கப் போராடினால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*உங்கள் முயற்சிகளெல்லாம் வெற்றியடைய நீங்கள்* *அழகாகதிட்டமிட்டால் அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*உங்களுடைய எல்லா முயற்சிகளும்*
*தோல்வியடைய, அதிலிருந்து பாடம் கற்று நீங்கள் முயன்று கொண்டேயிருந்தால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*எல்லோரும் உங்களுக்கு* *நம்பகமாக நடக்க, நீங்கள் தெளிவாய் முடிவெடுத்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*உங்களுக்கு வேண்டியவரெல்லாம்*
*உங்கள் முதுகில் குத்திக் கொண்டேயிருக்க*
*நீங்கள் தெளிவான வழியில் சென்றால்*
*அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
*உங்களிடத்தில் எல்லாம் இருக்க,*
*நீங்கள் எதிர்காலத்தைப் பற்றிக்கவலையில்லாமல் இருந்தால்*
*அதன் பெயர் நம்பிக்கையில்லை . . .*
*உங்களிடத்தில் எதுவுமே இல்லாத பக்ஷத்தில், நீங்கள் எதிர்காலத்தை நினைத்துப் பயப்படாமல் இருந்தால் அதன் பெயரே நம்பிக்கை ! ! !*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood afternoon Mam...
ReplyDeleteGudnoon Murali Sir..
Delete