Skip to main content

மாமனிதம்..

*☀️மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.*

*எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.* 

*காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான்,* *அடித்தான்*.

*அடிக்கும்போது* *எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்*.


*☀️ஆனால், காந்தி மட்டும் "ராம்!ராம்!!"* *என்று சொன்னது,*

*அவனை மிகவே*

*யோசிக்க வைத்தது.*

*அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்*.

*ஆனால், காந்தியை அவ்வப்போது* 

*உற்றுப் பார்த்தான்*.

*இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.* 


*☀️ஒரு நாள் "மிஸ்டர் காந்தி"*என்று கனிவாக* *அழைத்து*

*நான் உங்களுக்கு ஏதாவது உதவ* *நினைக்கின்றேன்;*

*என்ன வேண்டும் என்றான்?*


☀️ *ஏதாவது புத்தகம் கொடுங்கள்  என்றார் காந்தி. அவன் "பைபிள்" சார்ந்த இரு* *நூல்களைப் பரிசாக* *கொடுத்தான்*. 

*இந்தத் தொடக்கம்* *நட்பாக மாறியது; வளர்ந்தது.* 

*ஒரு நாள்* *காந்தியிடம் வந்த ஸ்மட்ஸ், நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன் என்றான்.*


*☀️ *மகிழ்ச்சி  எது?* *வருத்தம் எது?* *என்று கேட்டார்* *காந்தி*.

*இன்று உங்களுக்கு*

*விடுதலை*. *இது மகிழ்ச்சியான செய்தி.* 

*ஆனால், உங்களைப் பிரிய*

*என்னால் முடியவில்லை.*

*இது வருத்தமான* *செய்தி என்றான்*

*ஸ்மட்ஸ்.*

*காந்தி சொன்னார்*,


*☀️"நானும் உங்களுக்கு*

*ஒரு பரிசு* *தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்"* *என்று சொல்லி*,

*தான் சிறையில்* *தைத்த பூட்சை  அவரிடம்  கொடுத்தார்.* 

*ஆவலோடு அணிந்து பார்த்த ஸ்மட்ஸ் கேட்டான்,* 

*"இவ்வளவு*

*துல்லிமாகத்* *தைக்க,* *என் கால்களின்* *அளவு எப்படிக் கிடைத்தது*" 

*என்று கேட்க*,

*சிரித்தபடி காந்தி*

*தனது மார்புத்* *துண்டை அகற்றினார்;* 

*ஆரம்பத்தில்*

*ஸ்மட்ஸ் காலால் உதைத்தபோது* *ஏற்பட்ட வடுக்கள்* *அங்கு இருந்தன*.

*"இந்த வடுக்களை*

*அளந்துதான்* *தைத்தேன்" என்று காந்தி சொன்னார்*.


*☀️"தடால்" என்று சத்தம்;*

*ஸ்மட்ஸ் கீழே விழுந்து காந்தியின்* *கால்களைப் பிடித்துக்*

*கதறினான்.*

*"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!!*

*என்னை மன்னித்து விடுங்கள்.*

*இனி யாரையும்*

*அடிக்க மாட்டேன்"* *என்றார்*.


*☀️ஒரு நிமிடத்தில்,*

*ஒரு கொடிய மிருகம்,*

*மென்மையான*

*மனிதனாக* *மாறியது.*

*"கல்லையும் கனியாக* *மாற்றலாம்" என்று  இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.* 

*ஸ்மட்ஸ் சத்தியம் செய்தான்.*

*"இந்த பூட்ஸ்தான்*

*இனி எனக்குக்* *கடவுள்;*

*இதை மட்டுமே வணங்குவேன்"* *அணியமாட்டேன்* 

*என்று  சொல்லி* *அந்த பூட்சை தன்* *பூஜை அறையில்* *வைத்து அப்படியே* 

*வணங்கினான்.*

*🌹"நாம் நினைத்தால், யாரையும் மன்னிக்கவும் முடியும்.* 

*🌹மாற்றவும் முடியும்".*

*☀️மன்னிக்கின்ற மனம் தான் மனிதனை மகாத்மாவாக மாற்றும்.*

*🌹அன்பே சிவம்!!!🌹🌹கருணையே யேசு!!!🌹*

     *🌹நற்பண்பே நபிகள்!!!!🌹*

*மனிதன் மகிழ்வுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட* 

*🌹மாமனிதமே🌹 மிகச்சிறந்த பண்பு.....* 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. அதனால் தான் அவர் மகாத்மா...ஆனால் இன்று இருப்பவர்கள் அப்படி இல்லையே...சுயநலம் மட்டுமே இன்றைய வாழ்க்கையை தீர்மானிக்கிறது...

    ReplyDelete
  3. 2013 முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இன்னும் வேலை வாய்ப்பினைப் பெறாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் தேர்வுக்கான தகுதிச் சான்றிதழை ஆயுட்காலத் தகுதிச் சான்றிதழாக வழங்குவதற்குரிய சட்ட வழிவகைகள் குறித்து ஆராயப்படும். திமுக தேர்தல் அறிக்கை

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...