ஆண்டே! வருக! - மேலும்
ஆள்பவளே வருக! - எங்களுக்கு
ஆனந்தம் தருபவளே வருக!
கடந்த ஆண்டுகள் எல்லாம்
கல்லை விழுங்கியக்
கடலாய்க் கரைந்துப் போனது.
படிகாரங்கள் கற்கண்டுகளாய்
பதம் பார்த்ததுப் போல்
இதம் பாராமல் சென்றது ஆண்டுகள்.
கடல் விழுங்கியக்
கதை எல்லாம் போய்
சதை விழுங்கும் சண்டாளர்கள்
சாதனையாளர்களாய்
சாதிக்க வைத்தது அந்த ஆண்டுகள்.
இனி
இவையெல்லாம் உன் ஆண்டில்
இல்லாமல் மறைந்துப் போகட்டும்.
நீ வருவதற்கு முன் - எங்களின்
நிம்மதியையும் அரித்துவிட்டது
சென்ற ஆண்டுகள். - ஆம்
வந்தோரை வரவேற்று - தேநீர்
விருந்தளிக்கவும் தேவையான
பால் விலையும் ஏறிவிட்டது.
இருட்டில் தவித்த வீடுகளில்
இலவச மின் இணைப்பும்
உல்லாசமாக எரியாமல்
மின்வெட்டில் மழுங்கிவிட்டது.
மின் விநியோக உபயோகக்
கட்டணமும் உயர்ந்துவிட்டது.
இன்னும் நாங்கள் உயரவே இல்லை.
நீண்ட தூரப் பயணிக்கவும்
நாலுக் காசும் எங்களுக்கில்லை.
பேருந்துக் கட்டணமும்
ஏறிவிட்டது. - இன்னும் நாங்கள்
ஏற்றமிகு வாழ்க்கையில் வாழவே இல்லை.
அரசுப் பணியில் இருந்தாலும்
அரசுக்கு செலுத்தும் வரியும்
அகலவே இல்லை. - சென்ற
ஆண்டில் இரு அரசும்
அரசுப் பணியாளர்களுக்கு
அள்ளித்தந்த சம்பளமும்
போதவில்லை. - இரு அரசும்
கொடுப்பதைப் போல் கொடுத்து
கெடுப்பதற்கு திட்டம் தீட்ட
வைத்தது சென்ற ஆண்டு.
வெறும் கையாலே முழம் அளந்தாலும்
பூவாசம் வீசுமா? - சொல்லாலே
சொக்கவைத்தால்
சொர்க்கம் தான் தெரியுமா?
வெறும் கையாலே முழம் அளக்கும்
பூக்காரனைப்போல் - ஆசைகளை
சொல்லாலே சொக்கவைக்கும்
சூன்யக்காரனைப் போல்
சூன்யத்தை சூழவைத்தது
சென்ற ஆண்டு. - நீயாகிலும்
சுகமான நாட்களை
சுமந்து வா! - எங்கள்
சோகத்தை சுட்டெரிக்க வா!
ஏழைப் பாழைகளும்
ஏற்றம் காண ஏணியாக மாறி வா!
ஏளனமும், கேலியும் செய்யும்
ஏமாற்றுக்காரர்களை
எட்டி உதைக்கும் ஆண்டாக
ஏற்றமுடன் பிறந்து வா!
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteWishing all Puthagasalai friends, brothers and sisters a very happy tamil new year..
ReplyDeleteவணக்கம் தல
ReplyDeleteஇனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteHappy Tamil Newyear mam and friends
ReplyDelete��இன்பங்கள் பல காண ,
ReplyDeleteதுன்பங்களை துடைத்தெறிய பிறந்தாயோ என் புத்தம் புது புத்தாண்டே....
��கண்ணுகே அறியா எதிரியுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் இக்கணத்தில் உன் வரவை விடியலாய் தர பிறந்தாயோ....
��பிறந்தது முதல் இப்படி ஒரு சூழ்நிலையை கண்டதும் இல்லை கேட்கும் இல்லை, இந்த இன்னலை இனிதே முடிக்க பிறந்தாயோ..
��திசை அறியா இயந்திரமாய் சுற்றிய வாழ்க்கை , சுவர் பெற்ற ஓவியமாய் ஒளிர்வதை காண வந்தாயோ .....
��அன்றோ எத்திசையும் பறந்தோம் கடமையை செய்ய சிறகுகள் கொண்டு, ஆனால் ரசிக்க கண்கள் இல்லை...
ஆனால் இன்றோ கண்கள் உண்டு ,கண்டு ரசிக்க நேரம் உண்டு, ஆனால் சிறகுகள் இல்லா கிளியைப் போல அடைபட்டு இருக்கிறோம்.
இக் கோலம் காண ஓடி வந்தாயோ..
��அடிமைப்படுத்திய மொழியையே அழகு பார்க்கும் நாங்கள், அன்னை மொழியாம் தமிழில் பிறக்கும் என் புத்தாண்டே உன்னை ஆராதிக்க மறவோமே...
�� *அ* ன்பையும்,
*ஆ* யுளையும்
*இ* ல்லமெங்கும் *ஈ* த *உ* ன் *ஊ* ற்றென
*எ* ங்கும்
*ஏ* ற்றமதை
*ஐ* யமின்றி
ஒவ்வொருவரும்
*ஓ* ங்கி *ஔ* டதமற்று எ *ஃ* கு
போல் வலிமை பெற்று வாழ பிறந்தாயே என் புத்தாண்டே.... வாழ்க வாழ்த்துக....
��அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களுடன்��
ரேவதி சசிகுமார் ��
Superb Revathi mam..
DeleteThank you mam..
ReplyDelete