Skip to main content

Stay at home..

கிட்டத்தட்ட அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப் போயிட்டாங்க.

இனிமேல் உங்களை கை கழுவு ன்னு எல்லாம் யாரும் சொல்லப் போறது இல்லை.

மூன்றாவது கட்ட ஆட்டம் ஆரம்பம் ஆயிடுச்சு.

தனியார் மருத்துவமனையில் டெஸ்ட் பண்ண இப்ப அனுமதி கொடுத்து இருக்காங்க. இன்னையில் இருந்து யாருக்கும் வெளி நோயாளிகள் அப்பாயின்மெண்ட் கிடையாது.

காரணம் இல்லாமல் நீங்க எந்த மருத்துவ மனை படியையும் மிதிக்க முடியாது. கார்ப்பரேட் ஆபிஸ் மாதிரி பல கேள்விகள் கடந்து தான் உள்ளே வரமுடியும்.

அப்போல்லோ வில் இரண்டு ப்ளோர் கொரோனா வார்டுக்கு ஒதுக்கப் பட்டு இருக்கிறது.

அரசாங்க மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் அவசரமாக ஏற்படுத்தும் பணி நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு மேல் உங்களை காத்து கொள்ளும் ஆயுதம் உங்கள் கைகளில் மட்டும் தான் இருக்கிறது.

#stay_at_home

நீங்களும் யார் வீட்டுக்கும் போகாதீங்க. உங்க வீட்டுக்குள் யாரையும் வர விடாதீங்க.

வீட்டுக்குள் ஆளுக்கு ஒரு மூலை செலக்ட் செய்து படுக்கை போட்டுக்கோங்க.

பெரியவர்களுக்கு ஒரு அறை கொடுத்து அவங்களை அந்த அறைக்குள் இருந்து வெளியே வர விடாதீங்க. அங்கேயே நடமாட்டம் கட்டுப்படுத்துங்கள்.

இருபது வயது ஆட்களை அறுபது வயது ஆட்கள் கூட சேர விடாதீங்க.

அறுபது வயது ஆட்களை நாம காப்பாத்தி ஆகனும்னா வீட்டுக்குள் இதை எல்லாம் செய்து தான் ஆகனும்.

இன்னைக்கு இருந்து அத்தியாவசிய தேவைக்கு தவிர மீதி யாரும் வெளியே வர நினைச்சு கூட பார்க்காதீங்க.

வெளியே எந்த விஷயம் நடந்தாலும் எட்டிப் பார்க்காதீங்க. குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி வீடு விட்டு வெளியே போகக் கூடாதுன்னு மட்டும் தான் எண்ணம் இருக்கனும்.

அரசாங்கம் சொல்லி அதை எல்லாம் செய்ய ரெம்ப லேட் ஆயிடும். பொறுப்புள்ள குடிமக்களாக நாம நாளைக்குப் போடுற தடை உத்தரவு ஒரு மாத காலம் கடைப்பிடிப்போம் என்று உறுதி எடுத்துக் கொள்ளுவோம்.

இது மட்டும் தான் நம் கையில் இருக்கும் ஒரே ஆயுதம்.

இந்த ஒரு மாத காலத்தை தவற விட்டு தான் இத்தாலி இன்று இந்த நிலையில் உள்ளது.

இதைக் கடைப்பிடித்து தான் சவுத் கொரியா நோயாளிகளை குறைத்து இந்த நோயை வென்று உள்ளது.

இனிமேல் நமது வீட்டில் உள்ளேயும் தொடர்புகள் எல்லாம் இணைய வழி நடக்கட்டும். இணைய வழி தொடர்புகள் உறுதி செய்வோம்.

பிஎஸ்என்எல் ஒரு மாத காலத்திற்கு இலவச இணைய வழி சேவை கொடுத்து உள்ளது.

இணையம் பயன்படுத்துவோம்

நலமாக இருப்போம்

#stay_at_home

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Stay at home friends, thats the only medicine which can save us from this corona.. Trust almighty, stay at home, stay safe..

    ReplyDelete
    Replies
    1. Trb ஆ விட கொடுமையான நோயா இருக்கும் போல

      Delete
  3. வணக்கம் தல

    ReplyDelete
  4. Iruka koduma pathathunu intha koduma vera

    ReplyDelete
  5. Mam apo trt avlo thana mam

    ReplyDelete
    Replies
    1. Trb ku eppavume corona dhana.. TRT varum mam..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...