Skip to main content

பிரதமர் மோடி பேச்சின் முழுவிவரம்!


கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இன்று இரவு 12 மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் இரண்டாவது முறையாக நாட்டு மக்களுக்காக உரையாற்றினார். அப்போது அவர், தனக்கு ஒவ்வொரு இந்தியரும் முக்கியம் என்றும், ஊரடங்கு மூலம் பொருளாதாரம் பாதிக்கப்பட்டாலும் நாட்டு மக்களின் பாதுகாப்பே முதன்மையானது என தெரிவித்தார். மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.


குழந்தைகள், பெரியவர்கள், வியாபாரிகள் என அனைவரும் ஒன்றாக கொரோனா வைரஸூக்கு எதிராக செயல்பட வேண்டும் என கூறியுள்ள அவர், 22ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட மக்கள் ஊரங்கு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரோனாவை வீழ்த்த சமூக விலகல் மிக முக்கியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அரசுடன் மக்கள் அனைவரும் ஒத்துழைத்தால் மட்டும் 100% கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் என்று கூறியுள்ள மோடி, இந்தியாவில் உள்ள விஞ்ஞான அறிவைக்கொண்டு வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஒரேவழி வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது தான் என்றும், பொதுமக்கள் உறவினர்கள், வெளியாட்கள் என யாரையும் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.


வல்லரசு நாடுகளாலேயே கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ள பிரதமர், சமூக விலகல் மட்டுமே கொரோனா தடுக்கும் ஒரே வழி என கூறியுள்ளார். ஒருவருக்கு தெரியாமலேயே கொரோனா தொற்று இருக்கக்கூடும், அதனால் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என மோடி எச்சரித்துள்ளார். கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாநிலமும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் முழுமையாக அடைக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ள பிரதமர், கொரோனாவை தடுக்க 3 வாரங்கள் சமூக விலகம் என்பது மிக முக்கியம் என குறிப்பிட்டுள்ளார். நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ, அங்கேயே இருங்கள் என்று கையெடுத்து கும்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் என பிரதமர் கூறியுள்ளார். மருத்துவர்கள், மருத்து பணியாளர்களின் சிரமங்களை மக்கள் உணர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பிரதமர், அடுத்த 21 நாட்களை மக்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.


சுயக்கட்டுப்பாட்டுடன் இல்லையெனில் நாம் அழிவை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ள மோடி, நம்பிக்கை தான் வாழ்க்கையின் அச்சாணி எனவும் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு என்பது உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் காப்பாற்ற எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தான் என பிரதமர் விளக்கம் அளித்துள்ளார். மருத்தவர்கள் இரவு, பகலாக ஓய்வின்றி உழைத்து வருகின்றனர் என்றும், கொரோனாவை தடுக்க மத்திய மாநில அரசுகள் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றன என தெரிவித்துள்ளார். 24 மணி நேரமும் பணியாற்றும் ஊடகத்தினருக்கும், காவல்துறையினர் உள்ளிட்ட சேவை பணியாளர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்து அவர்களுக்காக பிரார்த்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.


21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைக்கும் என்று கூறியுள்ள பிரதமர், பொருட்கள் வாங்க எல்லோரும் ஒரே இடத்தில் குவியக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார். மக்கள் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், கொரோனா சிகிச்சைக்கான கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். 21 நாட்கள் ஊரடங்கு என்பது அதிகநாட்கள் தான் என்றாலும் கூட உங்களின் குடும்பத்தின் பாதுகாப்புக்கு இது முக்கியமானது என்றும், மருத்துவர்களின் ஆலோசனையின்றி யாரும் மருந்துகளை வாங்கவோ, உட்கொள்ளவோ கூடாது என தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..