Skip to main content

TODAY'S THOUGHT..

*ஓஷோவும்_அகப்பேய்_சித்தரும்*

தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி
*அகப்பேய்_சித்தர்*

ஒரு  எளிய விவசாயி, அவன் வாழ்நாளில்  முதல் முறையாக ஒரு  மலைக்குச் சென்று கொண்டிருந்தான்.

         அவனுடைய  வயலிலிருந்து அந்த  மலையின் பசுமை  நிறைந்த  உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி  அவற்றை அருகில்  சென்று  பார்க்க வேண்டும்  என்று  எண்ணம் ஏற்பட்டது.

 ஆனால்  ஏதோ காரணங்களினால்  அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு  செல்ல முடியவில்லை. 

         சென்ற முறை அவனிடம்  ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது.

  ஏனெனில்  இரவே மலையைச் சென்றடைவது மிகவும்  அவசியம்.

 சூரிய உதயத்திற்குப் பிறகு  அந்த கடினமான மலை மீது  ஏறுவது சிரமம்.

          இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான்.

 மேலும்  மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவன் இரவில்  தூங்கவும் இல்லை.

         அவன் இரவு இரண்டு  மணிக்கு  எழுந்து  மலைக்குப் புறப்பட்டான்.

 ஆனால்  கிராமத்தை விட்டு  வெளியில் வந்ததும் அவன் தயங்கி நின்று விட்டான்.

        அன்று அமாவாசையாதலால் சுற்றிலும் பயங்கர இருளாக இருக்குமே என்ற கவலையும், சந்தேகமும் அவனது மனத்தில் எழுந்தன.

          அவன் கையில்  விளக்கு ஒன்று  வைத்திருந்தான் என்பதில் சந்தேகம்  இல்லை. 

         ஆனால்  அந்த விளக்கின் ஒளி பத்து அடிகள் எடுத்து  வைக்கும் தூரம்தான்  தெரியும். 

ஆனால்  அவன் ஏற வேண்டியதோ பத்து மைல் தூரம். 

அவன் எப்படிச் செல்ல முடியும்?

         அந்த அடர்ந்த காரிருளில் சிறிய  மெழுகுவர்த்தியின் ஒளியில்   புறப்பட்டுச் செல்வது புத்திசாலித்தனம் ஆகுமா?

இது கடலில்  ஒரு சிறிய படகில் செல்வதைப் போன்றதாகும்.

         இவ்வாறு  எண்ணிக் கொண்டு  அவன் கிராமத்தின் வெளியே சூரிய உதயத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தான்.

        ஆனால்  அதே நேரத்தில்  மற்றொரு வயதான மனிதன்  தன்னைக் கடந்து மலையை நோக்கிச் செல்வதைப் பார்த்தான்.

        அந்த  மனிதன்  இவனிடமிருந்த விளக்கைவிட மிகச் சிறிய விளக்கையே வைத்திருந்தான்.

        அந்த  வயதான  மனிதனை நிறுத்தி அவனிடம் தனது சந்தேகத்தைக் கூறியதும் அந்த வயதான  மனிதன் சிரித்தான். 

       "பைத்தியக்காரா!
ஆரம்பத்தில்  நீ பத்தடிகள் எடுத்துவை.

நீ பார்க்க முடிந்த தூரம் வரை செல்.

பின் அதே அளவு தூரம்  உன் முன் விளக்கொளி இருப்பதை உணர்வாய்.

 உன் முன்னால்  ஒரு அடி தூரத்தைக் காண முடிந்தால் நீ அதன் உதவியால் இந்த  உலகம் முழுவதையும்  சுற்றி வரலாம்!"

 என்று  அந்த  வயதான  மனிதன் கூறினான்.

          அந்த  இளைஞன்  இதைப் புரிந்து  கொண்டு  எழுந்து நடந்தான்.

சூரியன்  உதயமாவதற்குள் மலையைச் சென்றடைந்தான்.

"நானும் அதைத்தான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன். 

 நீங்கள்  ஏன்  முடங்கிக் கொண்டு  உட்கார்ந்திருக்கிறீர்கள்?

எழுந்திருங்கள்;  நடந்து செல்லுங்கள்.

 நினைப்பவனல்ல, நடப்பவன்தான் சென்றடைய முடியும்.

 உன்னிடம் பத்து அடிகள்  எடுத்து  வைக்கும்  தூரத்திற்கு வேண்டிய  ஒளி இருந்தால் போதும்  என்பதை ஞாபகத்தில்  வைத்துக் கொள்.

 அதுவே  போதுமானது, கடவுளை அடைய அதுவே  போதுமானது."

*ஓஷோ*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...