Skip to main content

ஆத்திரம் அழிவைத்தரும்..



ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரக்காரன் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ,அல்லது கோபம் உடையவனாக.
இருப்பான்..

அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும்.மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு யோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான்.

அதனால் அவ் வேளையில் அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறாகவே போகும்.

மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார்.செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளி கழுகை ஏந்தி இருந்தார்.

அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்ப்பட்டது.
தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழைபோல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது.

ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருக சென்றார்.

ராஜாளி வேகமாக பாய்ந்து சென்று குவளையைத்
தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது.

ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும்
செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது.
வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டு     இருந்தது.

மீண்டும் செங்கிஸ்கான் தண்ணீரைச் சேகரித்து அதை அருந்த முற்பட்டார். துடி துடித்துக் கொண்டு இருந்த ராஜாளி மறுபடியும் பாயந்து வந்து குவளையை தட்டி விட்டது.

செங்கிஸ்கானுக்கு அடக்க முடியாத கோபம் பீறிட்டெழுந்தது. ராஜாளியின் நெஞ்சை வாளால் குத்திக் கிழித்தார்.

இப்போது மேல் இருந்து தண்ணீர் கசிவது நின்று விட்டது. கீழே தண்ணீர் கசிவு வறண்டு விட்டாலும் மேலே ஒரளவு தண்ணீர் இருக்கக் கூடும் என்று செங்கிஸ்கான் யூகித்தார்.

குன்றின் வழியே அவர் மேலே ஏறினார். அங்கே ஒரு சிறிய தடாகம் தென்பட்டது. ஆனால் அந்தத் தடாகத்தின் மத்தியில் கொடிய நாகப் பாம்புகள் செத்துக் கிடந்தது.

அந்தத் தண்ணீரை அருந்தியிருந்தால் தனது உயிர் பிரிந்திருக்கும் என்பதை செங்கிஸ்தான் உணர்ந்து கொண்டார்.

கீழே இறங்கி வநத செங்கிஸ்கான், செத்துக்கிடந்த ராஜாளியை இறுகத் தழுவிக் கொண்டார்.

இந்த ராஜாளிக்குத் தங்கச் சிலை வடிவமைக்க வேண்டும் என்று அவர் கட்டளை இட்டார்.

செங்கிஸ்கான் விருப்பதிற்கு ஏற்ப தங்க ராஜாளி சிலை வடிவு அமைக்கப்பட்டது.

அதன் ஒரு சிறகில் ஒரு நண்பன் உனக்கு விருப்பம் இல்லாததைச் செய்தாலும் கூட, அவன் தொடர்ந்து உனது நண்பனாகவே இருக்கிறான் என்று பொறிக்கப் பட்டது.

மற்றொரு சிறகில், ஆத்திரத்தோடு செய்கிற செயல் அழிவையே தரும் என்றும் பொறிக்கப்பட்டது.

ஆம்.,நண்பர்களே..

எதிலும் ஆத்திரமோ, அவசரமோ இல்லாமல் புத்திசாலிதனமாக ஈடுபட்டால் எதிலும் வெற்றிதான் .

அதே சமயம் அழிவுக்கு காரணம் அவசரமும் , ஆத்திரப்படுதலே ஆகும் .

எல்லாமே நன்றாக அமைய ஆத்திரப்படாமலும் அவசரப்படமாலும் இருந்தால்நல்லது.💐💐💐💐💐💐

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. என்ன போராட்டம் நடக்க போகுது

    ReplyDelete
  4. காலை வணக்கம் அட்மின் அவர்களே

    ReplyDelete
  5. நாளை 2013ஆம் ஆண்டு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 2013 ஆண்டு நடந்த முறைகேடு பற்றிய புகார் அளிக்க போகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. Super. Etho exam seekirama varanum

      Delete
    2. 2012 examla kuda fraud vela than nadanthutham

      Delete
    3. Munkotiye soliruntha nankalum vanthurupom

      Delete
    4. Nalaiku ethana manikku porattam

      Delete
  6. அவர்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. காலை வணக்கம் சகோதரி

    ReplyDelete
  8. கழுகுக்கு இருக்கும் நன்றியுணர்வு மனிதரிடம் இல்லை என்பதே உண்மை

    ReplyDelete
  9. Goodmorning admin mam. Nice thought mam.

    ReplyDelete
  10. Mam porattam unmayana news thana

    ReplyDelete
  11. Nalaikku porattam pana poradhu unmai dhan.. TET candidates nalaiku tv paarunga, live telecast pana porangalam.. lets c..

    ReplyDelete
  12. Anon mam apadiyea TRT pathi ketka sollunga mam

    ReplyDelete
  13. கஷ்டப்பட்டு படிச்சவங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது

    ReplyDelete
  14. Mam nalaiku porattathala ethavathu nallathu nadakkuma

    ReplyDelete
  15. Porattam elam onnu velaikku akathu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..