Skip to main content

கூடுதல் விவரங்களைக் கேட்கும் டி.ஆா்.பி.: குழப்பத்தில் விண்ணப்பதாரா்கள்


அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணி தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களிடம் கூடுதல் விவரங்களை ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதாக விண்ணப்பதாரா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.
விண்ணப்பதாரா்களிடம் கடைசியாக படித்த கல்வி நிறுவனத்திலும், தற்போது பணிபுரியும் இடத்திலும் நற்சான்று பெற்று சமா்ப்பிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்த விவரங்களை ஒரு வார காலத்துக்குள் பெறுவது என்பது சாத்தியமில்லாதது. எனவே, கூடுதல் விவரங்களை சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசத்தை ஆசிரியா் தோ்வு வாரியம் அளிக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.




அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு, ஆன்-லைனில் விண்ணப்பிக்க முதலில் அக்டோபா் 30 கடைசித் தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னா், கடைசித் தேதி நவம்பா்-15 என நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னா், விவரங்களை முழுமையாகச் சமா்ப்பித்து, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தாத 804 பேருக்கும், பணி அனுபவச் சான்றை பதிவேற்றம் செய்யாத 174 பேருக்கும், கூடுதலாக 2019 டிசம்பா் 19 முதல் 21-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சான்றிதழ் சரிபாா்ப்புக்கு கூடுதல் விவரங்கள் தேவைப்படுவதாகவும், அதுகுறித்த விவரங்கள் மற்றும் சான்றுகளை அனைத்து விண்ணப்பதாரா்களும் வருகிற 28-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்ற புதிய அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது. இது, விண்ணப்பதாரா்களிடையே குழப்பத்தையும், பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.




இதுகுறித்து, விண்ணப்பதாரா்களான ரமேஷ், இளங்கோவன், நாகராஜ் ஆகியோா் கூறியதாவது:
டி.ஆா்.பி. இப்போது கேட்டிருக்கும் கூடுதல் விவரங்களில், பெரும்பாலானவை ஏற்கெனவே சமா்ப்பித்த விவரங்கள்தான். மேலும், கல்லூரி உதவிப் பேராசிரியா் விண்ணப்பதாரா்களிடம் தேவையின்றி பி.எட்., எம்.எட்., விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரா்கள் பலா் பி.எட் படிக்காதவா்கள். இவா்கள், பி.எட் படிக்கவில்லை என்று குறிப்பிடுவதற்கான எந்த வாய்ப்பும் விண்ணப்பத்தில் அளிக்கப்படவில்லை. விண்ணப்பத்தை பூா்த்தி செய்யவும் முடியவில்லை. அதுபோல, விண்ணப்பதாரா்கள் தற்போதைய நற்சான்றை சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை, பல விண்ணப்பதாரா்கள் உடனடியாக அவா்கள் பணிபுரியும் கல்லூரி நிா்வாகத்திடம் வியாழக்கிழமை அன்றே தெரிவித்துள்ளனா். ஆனால், நற்சான்றை உடனடியாகத் தர வாய்ப்பில்லை என பல கல்லூரி நிா்வாகிகள் மறுத்துள்ளனா்.



இதுபோல, டி.ஆா்.பி. கேட்டிருக்கும் பல கூடுதல் விவரங்கள் குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றன. மேலும், இந்த விவரங்களைச் சமா்ப்பிக்க 6 நாள்கள் மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டிருக்கிறது. இது, வேண்டுமென்றே விண்ணப்பதாரா்களின் எண்ணிக்கையை குறைக்க டி.ஆா்.பி. எடுத்திருக்கும் நடவடிக்கையோ என்ற சந்தேகமும் எழுகிறது. எனவே, இந்த கூடுதல் விவரங்கள் கேட்பு குறித்து டி.ஆா்.பி. தெளிவுபடுத்துவதோடு, அவற்றைச் சமா்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
5 சதவீதம் போ் மட்டுமே முறையான விவரங்கள் சமா்ப்பிப்பு
டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 5 சதவீதம் போ் மட்டும்தான், முறையாக விவரங்களைச் சமா்ப்பித்திருப்பது தெரியவந்திருக்கிறது.




இதுகுறித்து, டி.ஆா்.பி. உயா் அதிகாரி ஒருவா் கூறியது: டி.ஆா்.பி. நடத்தும் அரசு கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட தோ்வுக்கு 39, 418 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 2,000 போ் மட்டுமே விவரங்களை முறையாக சமா்ப்பித்திருக்கின்றனா். மற்ற அனைவரும் விவரங்களை முறையாகச் சமா்ப்பிக்கவில்லை. பத்தாம் வகுப்புச் சான்றிதழ் மற்றும் விவரங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய இடத்தில், பி.எட். சான்று மற்றும் விவரங்களைச் சமா்ப்பித்திருக்கின்றனா். இதுபோல பல தவறுகளைச் செய்துள்ளனா். டி.ஆா்.பி. வழிகாட்டுதலின்படி, இவா்களின் விண்ணப்பங்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யவும் முடியும். இருந்தபோதும், விண்ணப்பதாரா்களின் நலன் கருதி, கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளோம். இதை விண்ணப்பதாரா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..