உன் முகவரியை
வெளிக்கொணர
படு பிரயத்தனம்
செய்ததில் தொலைந்து
போன எம் முகவரிதான் என்ன?
பாடப்பகுதிகளை
இலகுவாக்கி
உன் பாணியில்
போதிப்பதே
எம் பணியானதென்ன?
பள்ளிக்கு நீ
வாரா பொழுதுகளில்
உன் இல்லம் வந்து
கட்டியிழுத்து கொணர்ந்தாலும்
பல நேரங்களில்
பூட்டிய உன் வீட்டின்
கதவுகளும் எமை
பரிகசிப்பதுதான் என்ன?
ஆடி மாதம்!
குல தெய்வ வழிபாடு
கூழ் வார்த்தல்
பொங்கல் வைத்தல்
அத்தனைக்கும்
முன்னிலை வகிக்கும்
உன் பெருந்தன்மைதான் என்ன?
எதிர் வீட்டுப் பாட்டி
இறப்பு!
பக்கத்து வீட்டு அக்கா
வளைகாப்பு!
உறவுமுறை சொல்ல
தெரியாத வீட்டில்
காதுகுத்து!
எல்லா சுக துக்கங்களிலும்
உன் பங்கேற்றலை
பெருமிதப்படுத்துவதுதான் என்ன?
இதையெல்லாம்
தாண்டி நீ பள்ளிக்கு
வருங்கால் உன்னுடனே
ஒட்டிவரும்
தலைவலி, வயிற்றுவலி
அதிகமாய் கொஞ்சம்
நெஞ்சுவலி,
உன் விடுப்பு இன்னும்
முடியவில்லை என்று
எம்மை உணரவைதததுதான் என்ன?
எம்மை பாவம் என்று
நினைத்து நீ பள்ளிக்கு
வரும் தருணங்களில்
எதை புரியவைப்பது
எப்படி படிக்க வைப்பது
என்கிற அறப்போராட்டத்தில்
எம்பெயர் கூட
எம் நினைவினின்று
மறந்து போவதுதான் என்ன?
எழுத குறிப்பேடு
வேண்டாம்
எழுதுகோல்
வேண்டாம்
நீங்க வந்தா மட்டும்
போதும்!
இது இக்கால
வாத்தியாரின்
உபதேசமாகிப்
போனதுதான் என்ன?
எல்லாம் முடிந்து
தேர்வுக்கு தயாராகையில்
மழையில் கரைந்த
மணப்பெண்
அலங்காரம் போல்
கிரியேட்டிவ் வினா
வந்து எம்மை
கதிகலக்குவதுதான்
என்ன?
எல்லா ஆசிரிபருக்கும்
நடக்கும் நிகழ்வு ஒன்று
உண்டு!
அது,
வகுப்பறையில்
நுழைந்த எந்த ஒரு
அதிகாரியும் உன்னை
மோப்பம் பிடித்து விடுவதின் மர்மம் தான் என்ன?
அவரின் தூண்டித்
துருவல் வினாக்களுக்கும்
எந்த ஒரு சலனமும்
இன்றி
இறுகிப் போன உன்
முகபாவம்தான் என்ன!
மெல்லக் கற்போனிடத்தில்
ஆசிரியரின் தனிக்கவனம் தேவை!!!
அதிகாரியின்
அறிக்கையானதில்
தொலைந்துபோன
எம் முகவரியை தேடிக்
கொண்டிருக்கிறோம்!!!!
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Good morning mam
ReplyDeleteHappy teachers day ano sis
ReplyDeleteமதிப்பிற்குரிய ஆசிரிய சொந்தங்களுக்கு மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ReplyDeleteThank u sir wish u d same to all
ReplyDeleteGood evening Ano Mam and happy teachers day
ReplyDelete