ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்தாண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி பல்வேறு விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை வகுத்துள்ளது.இதன்படி ஆன்லைன் வழியில் இடமாறுதல் நடக்கிறது. இதற்கான விண்ணப்ப பதிவு ஜூன் 22ல் துவங்கியது. இன்றுடன் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் அவகாசம் முடிகிறது. ஜூலை 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment