சென்னை, :தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும்
நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள், 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி, மார்ச், 1ல் தேர்வுகள் துவங்கின.பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, மார்ச், 19ல் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 6ல் துவங்கி, மார்ச், 22ல் முடிந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதம் நடத்தப்பட்ட பொது தேர்வுகள், எந்த குளறுபடியும் இன்றி, வினாத்தாள், 'லீக்' ஆகாமல், முடிந்துள்ளன.பிளஸ் 2 வினா தாள்கள் எளிதாக இருந்தன. ஆனால், பிளஸ் 1 தேர்வுகளில், கடின வினாக்களால் மாணவர்கள் திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வில், எப்போதும் இல்லாத அளவுக்கு, கணிதம், அறிவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன.இந்த தேர்வுகளுக்கான விடை தாள் திருத்தம், படிப்படியாக துவங்க உள்ளது. முதலில், பிளஸ் 2 விடைத் தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு, ஏப்.,19; பிளஸ் 1க்கு, மே, 8; பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 29ம் தேதிகளில் வெளியாகும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment