அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ'வை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள், இன்று ஒரு நாள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். 'போராட்டத்தில் ஈடுபடுவோரின் கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாதவை' என, அமைச்சர் ஜெயகுமார் கூறினார். இதனால், அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். அதைத் தொடர்ந்து, அரசு அங்கீகாரம் பெற்ற சில சங்கங்கள், இன்று ஒரு நாள், அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளன.தலைமை செயலக சங்கத் தலைவர், பீட்டர் அந்தோணிசாமி கூறியதாவது:கைதான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். இல்லையெனில், ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவோம் என, முதல்வர் மற்றும் தலைமை செயலரிடம் மனு அளித்தோம்.யாரும் கண்டு கொள்ளாததால், இன்று திட்டமிட்டபடி, வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். முதல்வர் எங்களை அழைத்து பேசாவிட்டால், அடுத்கட்ட நடவடிக்கை குறித்து, நாளை முடிவு செய்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.பங்கேற்பில்லைதமிழ்நாடு அரசு அலுவலர் கழகம், 'சி - டி பிரிவு' இன்றைய, வேலை நிறுத்தத்தில் பங்கேற்க போவதில்லை என, அந்த அமைப்பின் மாநில தலைவர் சவுந்தரராஜன், தெரிவித்துள்ளார்.ஏழு பேர், 'சஸ்பெண்ட்'தலைமை செயலகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட, சட்டசபை செயலகம், நிதித்துறை, உள்துறை, உள்ளாட்சித்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் துறை சார்ந்த, ஏழு ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள காலத்தில், சென்னையை விட்டு, எங்கும் செல்லக் கூடாது என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.கும்பல் சேர கூடாது!தியாகிகள் தினத்தையொட்டி, இன்று, தலைமை செயலக வளாகத்தில் உள்ள, ராணுவ மைதானத்தில், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும். தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலை நிறுத்தம் செய்வதால், உறுதி மொழி ஏற்பில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.போராட்டத்தை கைவிட அரசு வலியுறுத்தியும், சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. இதனால், போராட்டத்தை ஒடுக்க, 'தலைமை செயலக வளாகத்தில், ஊழியர்கள் அனுமதியின்றி கூடக்கூடாது' என, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment