Skip to main content

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்

சென்னை: 9 நாட்களாக நடந்து வந்த ஜாக்டோ ஜியோ அமைப்பினரின் போராட்டம்
தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.



தொடர் போராட்டம்

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் என தொடர் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது சஸ்பெண்ட், பணியிட மாற்றம் என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. போதிய நிதியில்லாத காரணத்தினால், அரசு ஊழயர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என கூறிய தமிழக அரசு, ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களையும் நியமனம் செய்யப்படும் எனவும் அறிவித்தது. ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர்கள், பல கட்சி தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

நடவடிக்கை

இந்நிலையில், சென்னையில் நடந்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், 9 நாட்களாக நடந்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்று கொள்வது என முடிவு செய்யப்பட்டது.
பின்னர், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறுகையில், முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நாங்கள் கோரிக்கை விடுத்தோம். ஆனால் பேசவில்லை. வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்த பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்திய போது, முதல்வர் சந்தித்து பேசுவார் எனக்கூறினார். அதனை தான் கேட்கிறோம். ஆனால், பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆசிரியர், அரசு என இரு தரப்பும் ஒரு மித்த கருத்தில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். ஆனால், தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தாமல், நடவடிக்கை எடுத்து வருகிறது.

நாளை முதல் பணி

பிப்., மாதத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது மற்றும் செய்முறை தேர்வு துவங்குவதால், மாணவர்களின் நலன், பெற்றோரின் உணர்வு, முதல்வர் அழைப்பு, கட்சியினர் வேண்டுகோள், நீதிபதியின் கருத்துகளை ஏற்று போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம். கோரிக்கை அப்படியே உள்ளது. போராடிய நிர்வாகிகள் சிறையில் உள்ளனர்.

ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதுடன், அந்த பணியிடங்களை காலியாக அறிவித்து மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். நாளை (ஜன.,31) முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலக்கு திரும்புவோம்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..