Skip to main content

படித்ததில் பிடித்தது..

ஒருவர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க எண்ணி, ஒரு சிற்பியை காண சென்றார்.._

_அவர் சென்றபொழுது அந்த சிற்பி ஒரு கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.._

_கொஞ்ச நேரம் சிற்பி சிலை செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர்,_
_*அதே மாதிரி செதுக்கிய இன்னொரு சிலை அங்கு கிடப்பதை கவனித்தார்..*_

உடனே அவர் சிற்பியிடம், *”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி இரு சிலைகள் வைப்பார்கள்?* *_இல்லை.. இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?”_* என்று சிற்பியிடம் கேட்டார்..

சிற்பி சிரித்துக்கொண்டே,
_*“இல்லை ஐயா.. கீழே கிடக்கும் சிலையில் பிழை உள்ளது..”*_ என்றார்..

அவர் ஆச்சரியத்துடன், _*"என்ன சொல்றீங்க.. மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை.. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!"*_ எனக் கேட்டார்..

_*"அந்த சிலையின் இடது காதில் சின்ன கீறல் இருக்கிறது.. பாருங்கள்"*_ என்றார் சிற்பி..

_*“ஆமாம்!. அது சரி.. இந்த சிலையை கோவிலில் எங்கே வைக்கப் போகிறார்கள்?”*_ என்று கேட்டார்..

_*“இது கோவில் கோபுரத்தில், இருபது அடி உயரத்தில் வரும் சிலை!”*_ என கையை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி..

அவர் வியப்புடன், _*”இருபது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் மடத்தனமாக இன்னொரு சிலை செய்கிறீர்கள்..!”*_ என்றார்..

_*“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.. அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்”*_ என்றார் சிற்பி..

_வந்தவர் சிற்பியின் தொழிற்பக்தியை எண்ணி தனக்கான சிலையை தாங்களே செய்யவேண்டும் என்று கூறி சென்றார்.._
🐝

👇
*_அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்வதை விட.._*

*_நம் மனத்திருப்திக்காக வேலை செய்வதே சிறந்ததாகும்.._*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Jagat sir..

    Gudmrng, sorry was not able to reply yesterday since I saw ur msg late night only..

    PG la 900 postings upgraded schools la potanga, temporary postings dhan adhu, andha postings ah 2021 vara extend pani, avangaluku normal pg scale la salary kudukanumnu solliyum oru GO publish panirkanga sir..

    This is actually very big disappointment for all who were waiting for list as well as exams. Pakka fraud vela idhu, temporary postings ah ipdi extend pani normal pay scale kuduka avasiyame ila..

    Something wrong going on sir..

    ReplyDelete
  3. 🅱💢 *_Flash News : அரசு பள்ளிகளில் போலி ஆசிரியர்கள்_*

    🔥🔥 *200 ஆசிரியர்களின் சான்றிதழ்களை ஆய்வு செய்ய உத்தரவு*

    http://www.asiriyar.net/2018/10/flash-news-200.html

    ReplyDelete
  4. Everything is going wrong mam...what shall we do...
    Anyway tq for your reply mam...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...