Skip to main content

TODAY'S THOUGHT..

இதுதான் வாழ்க்கை !
கேரள வெள்ளம் உணர்த்தும் பாடம் !
“இந்தப் பகுதி இன்னும் அரைமணி நேரத்தில் மூழ்கிவிடும்.
முக்கியமானதை மட்டும் எடுத்துக்கொண்டு வெளியேறுங்கள்”
இதைக் கேட்டபோது அவர்கள் முழங்கால் அளவு
தண்ணீரில் நின்றுகொண்டிருந்தார்கள்.
இப்போது அவர்கள் பிரச்சினை
எதையெல்லாம் எடுத்துக்கொள்வது என்பதல்ல
எதையெல்லாம் கைவிடுவது என்பதுதான்.
முதலில் கைகளில் எதையெல்லாம் தூக்கிக்கொள்ள முடியாதோ அதையெல்லாம் கைவிட்டார்கள்.
பிறகும் கைவிடுவதற்கு ஏராளமாக இருந்தன.
பரிசுப்பொருள்கள்
தெய்வப்படங்கள்
புகைப்பட ஆல்பங்கள்
ஆடைகள்
உள்ளாடைகள்
புத்தகங்கள்
இசைக்கருவிகள்
இசைப்பேழைகள்
ஸ்பூன்கள்
கண்ணாடிக் கோப்பைகள்
பொம்மைகள்
கண்ணீரின் உப்புப் படிந்த தலையணைகள்
உடல் வாசனையுள்ள போர்வைகள்
அழகு சாதனப்பொருள்கள்
கைவிடுவதற்கு முடிவேயில்லாமல் ஏராளமாக இருந்தன.
நீங்கள் கைவிடும்போது உங்கள் மனதை ஒரு பனிக்கட்டியைப்போல உறையச் செய்ய வேண்டும்.
எவ்வளவு கருணையற்றவராக இருக்கமுடியுமோ அவ்வவு கருணயற்றவராக மாறவேண்டும்.

ஒரு தூக்கிலிடுபவனைப்போல உங்கள் கண்கள் மரத்துப் போக வேண்டும்.
ஒரு பாலித்தீன் பை அளவுக்கு மட்டுமே எதையும் எடுத்துக்கொள்ள அவர்களுக்கு அவகாசம் இருந்தது. அனுமதி இருந்தது.
அவர்கள் ஒரு பிரம்மாண்டமான விற்பனையகத்தின் முன்னால்கூட அப்படி திகைத்து நின்றதில்லை.
தேர்வு என்பது அத்தனை கடினமானதாக இருந்தது.
அத்தனை உணர்ச்சிகரமானதாக இருந்தது.
எதுவுமே அவ்வளவு முக்கியமல்ல என்று தோன்றிய கணத்தில் அவர்கள் தோள் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டிருந்தது.
கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டார்கள்.
வங்கிக் கணக்குப் புத்தகங்களை எடுத்துக் கொண்டார்கள்.
சான்றிதழ்ககளை எடுத்துக் கொண்டார்கள்.
ஆயுள் காப்பீட்டுப் பத்திரங்களை எடுத்துக்கொண்டார்கள்.
ரேஷன் கார்டுகளை, வாக்காளர் அட்டைகளை, ஆதார் அட்டைகளை, வாகனங்களை கைவிட்டு ஓட்டுனர் உரிமங்களை, கடன் பத்திரங்களை இன்னும் என்னென்னவோ!
முத்திரையிடப்பட்ட காகிதங்களை, ஆவணங்களைத் தவிர நம் வாழ்வை மீண்டும் நீட்டிக்கச் செய்வதற்கு வேறு எதுவுமே முக்கியமல்ல என்பது அவர்களை ஒரு கணம் அதிர்ச்சியடைய வைத்தது.
பிறகு வீடுகளை அப்படியே திறந்து போட்டு விட்டு ஒரு பாலீத்தின் கவரை தலைக்கு மேலாக தூக்கிப் பிடித்தபடி மேட்டு நிலம் நோக்கி தண்ணீரில் வேக வேகமாக நடந்து சென்றார்கள்...
வாழ்க்கையே இவ்ளோதான்... இதிலே,  நான்தான் உத்தமன்... நான்தான் உயர்ந்தவன்...  என் தலைவர்தான் நல்லவரு - வல்லவரு (?)...  என் மதமும், ஜாதியும் தான் ஒசந்த ஜாதி,... என் சாமிதான் ஒசந்தது... இது என்னோட இடம்... நான்தான் பணக்காரன்... இப்படி எத்தனை பாகுபாடுகள்.... "கடைசி"யா இதுல ஏதாச்சும்  கைகுடுத்துச்சா...???.கை கொடுக்குமா...??? ..
சிந்திப்போம்...
இதுதான் வாழ்க்கை! இவ்வுலகில் நீங்களோ, நானோ  எதை விட்டுச் செல்ல போகிறோம்...???
நாளைக்கு எதை இங்கிருந்து எடுத்துச் செல்ல போகிறோம்...???
இருக்கும் வாழ்க்கையில், பிறர் மனம் நோகாமல்  நல்லவைகளை பேசி, முடிந்தவரை  பிறருக்கு உதவி  செய்து... எவருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்வோம்...!!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Ano sis..
      Moondru naatkalaga en uravinar oruvarin meedhu migundha kobadhudan irundhen sis inraya pathivu antha kobathin 90% kuraindhiruku sis thank u sis.
      Have a marvellous day sis...

      Delete
    2. Gudmrng Santhi sis..

      Life is actually accepting the unexpected that happens.. Mudinja alavukku mannikrathum, marakradhum naladhu sis..

      Delete
    3. Irukkura 10% kopathaium mudinja vitturunga santhi sis...🙏
      Inaikku irukkuravanga naalaikku irupaangala enpathey...??? Than...!!!!
      Mosamaana ulagathula vaalnthutu irukkom...!!!👍

      Delete
    4. Correct than sunder bro anal namma muthukil kuthumpodhu antha pain-i avvalavu viraiva mind-i maathika mudiyala bro.
      Netru or Saturday avarkalai parthirundhal enna pesi irupen enru enake theriyathu bro god is great atharku than naan innum avarkalai parka mudiyala bro..

      Delete
    5. Ano sis
      Mannikavum marakavum try panren sis👍👍

      Delete
    6. Santhi sis..

      Andha pain enakkum theriyum, adhanala dha marakkavum mannikkavum try panunga nu sonnaen, idhu rendum mudiyadha cases la total ah ignore panidunga sis, they don't deserve to b in ur life..

      Delete
    7. Ano sis..
      Thank u for ur valuable words and affection sis..

      Delete
    8. Ano sis..
      Thank u for ur valuable words and affection sis..

      Delete
  2. Good morning ano mam, sunder brother & frds

    ReplyDelete
  3. Good morning Ano sis Have a nice day

    ReplyDelete
  4. Good morning ano sis and friends

    ReplyDelete
  5. Gud mrng anon mam
    Revathy mam
    Santhi mam
    Banu mam..
    Mythili mam
    Shajii mam
    Ramya mam..
    Thanesh mam
    Anees mam
    Sabina mam
    Viji mam..
    Sathya mam...
    Barathi mam..

    Sunder sir
    Arul sir
    Nabu sir
    all my dr.puthagasalai frnds..
    Have a Nice day

    ReplyDelete
    Replies
    1. Good morning Abdul sir

      Delete
    2. இனிய காலை வணக்கம் அப்துல் அவர்களே

      Delete
    3. Good noon Abdul sir...

      Delete
  6. Good morning, sister and friends.

    ReplyDelete
  7. Good morning friends and ano mam
    Abdul bro
    Sundar bro
    Nabu bro
    Thanesh mam
    Ramya sis
    Revathi sis
    Sabina sis
    Arul bro
    Fathima sis
    Santhi sis
    Anees sis
    Prakash bro
    And all the friends in this blog

    ReplyDelete
  8. Good morning ano mam sunder sir and my friends

    ReplyDelete
  9. Good morning ano mam & dear friends

    ReplyDelete
  10. Good morning ano mam & dear friends

    ReplyDelete
  11. செப்டம்பர் 5 சிறப்பாசிரியர்களுக்கு பணிநியமன ஆணை

    தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வாகும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினத்தன்று பணிநியமன ஆணை -பள்ளிக்கல்வி துறை அமைச்சர் உறுதி http://kalviexpress.blogspot.com/2018/08/blog-post_297.html

    ReplyDelete
    Replies
    1. இந்த உறுதிமொழியாவதுஉண்மையாகட்டும்அருள் அண்ணா. சிறப்பாசியர் சான்றிதழ் சரிபார்ப்பு என் அக்கா போயிட்டு வந்திருக்கா, அவளுக்காவது கிடைத்தால் சற்று ஆறுதலாக இருக்கும்.

      Delete
    2. இறைவன் அருள்புரிய வேண்டுகிறேன் ரேகா அவர்களே

      Delete
    3. நன்றி அண்ணா

      Delete
  12. Tet case nilamai enna arul sir

    ReplyDelete
    Replies
    1. வழக்கு பற்றிய தகவல் தெரியாது நண்பரே
      வழக்கு எண் இருந்தால் கொடுங்கள் வலைதளத்தில் தேடி தகவல் கொடுக்கிறேன்

      Delete
  13. Yethavathu oru exam vantha nailla erukum.. Tensed ah vey eruku

    ReplyDelete
  14. Good noon
    Ano sis
    Abdul sir
    Sunder sir

    ReplyDelete
  15. இது குட்மானிங் குழுவா

    ReplyDelete
  16. Gud nt anon mam & dr.frnds..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here