சென்னை: தமிழக அரசு அருங்காட்சியகங்களில், விரைவில், நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக தொல்லியல் துறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மற்றும் அகழாய்வு களை செய்து வருகிறது.
அப்போது, கண்டுபிடிக்கும் தொல்பொருட்களை பற்றி, ஒப்பீட்டாய்வு அடிப்படையில், ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடுகின்றன.அவை, சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஆய்வாளர் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், &'மாவட்டங்களில் உள்ள, அருங்காட்சியகங்களில், அந்த நுால்களை வைக்க வேண்டும்&' என, ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்த செய்தி, நமது நாளிதழிலும் வெளியானது.இந்நிலையில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, &'மாவட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் அகழ் வைப்பகங்களில், நுாலகங்கள் அமைக்கப்படும். &'நுாலகம் அமைக்க, எட்டு லட்சம் ரூபாயும், நுால்கள் வாங்கி பராமரிக்க, இரண்டு லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படும்&' என, தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், 14 அகழ் வைப்பகங்களில், வரலாற்று நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இவற்றில், தமிழக தொல்லியல் துறையின் நுால்கள் இடம்பெறும் எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை, வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்று உள்ளனர்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment