அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு முதல், ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கியது. முதல் நாளில், 7,420 பேர் விண்ணப்பித்தனர். மே, 16ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
அப்போதிருந்து, விண்ணப்ப பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 84 ஆயிரத்து, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும், 30ம் தேதி கடைசி நாள். அதற்குள், 1.75 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment