அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550க்கு மேற்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு முதல், ஒருங்கிணைந்த ஆன்லைன் கவுன்சிலிங் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் பங்கேற்க, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 3ல் துவங்கியது. முதல் நாளில், 7,420 பேர் விண்ணப்பித்தனர். மே, 16ல், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின.
அப்போதிருந்து, விண்ணப்ப பதிவு அதிகரிக்க துவங்கியுள்ளது.தேர்வு முடிவு வந்த மூன்று நாட்களில், 27 ஆயிரத்து, 500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை, 84 ஆயிரத்து, 400 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
வரும், 30ம் தேதி கடைசி நாள். அதற்குள், 1.75 லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment