யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசின் சிவில் சர்விஸ் எழுத்து தேர்வு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது, தற்போது இதில் தேர்ச்சி பெற்று நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளப் போகு தேர்வர்களின் இறுதி பெயர் பட்டியில் வெளியாகியுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் 32 மாணவர்கள் ‘அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை’ சேர்ந்தவர்கள்.
இதில் இந்தியா அளவில் 29வது இடத்தையும் தமிழகத்தில் முதலிடத்தையும் பிடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்திவாசன். இவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடமியில் நேர்முகத் தேர்வு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழை விருப்பப் படமாக தேர்ந்தெடுத்து அகில இந்திய அளவில் 71-வது இடம்பிடித்து, தமிழக அளவில் 2ம் இடம் பிடித்த மதுபாலன் என்பவரும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியை சேர்ந்தவர்.
மேலும் தமிழிலேயே தேர்வை எழுதியவர்கள், முதல் நிலை தேர்வு தொடங்கி நேர்முகத் தேர்வு வரை அனைத்தையும் அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் முடித்தவர்கள், பணியில் இருந்துகொண்டே படித்தவர், வேறு அரசுத் துறைகளில் பணியாற்றிக் கொண்டே ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று படித்தவர்கள், கடுமையான ஏழ்மைச் சூழலில் இருந்து வந்தவர்கள் என பலதரப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்தவர்களுக்கும் இம்முறை வெற்றி கிடைத்துள்ளது.
அறம் அகாடெமியில் படித்து 356வது இடம் பிடித்துள்ள ஸ்ருதி ஸ்ரீனிவாசன் கூறுகையில்: “சட்டப்படிப்பில் இளங்கலை முடித்து நேரடியாக அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமியில் பயிற்சி எடுத்தேன். முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகிய அனைத்திலும் இவர்களது வழிகாட்டுதலிலேயே சுலபமாக வெற்றி பெற முடிந்தது” என்று தெரிவித்துள்ளார்.
கடினமாக உழைத்து இம்முறை இந்திய வருவாய்த் துறை பணிக்குத் தேர்வாகியுள்ள மோகன பிரியா கூறுகையில் “சில ஆண்டுகளாகவே கடனமாக தேர்விற்கென்று தயாராகி வந்தேன். சென்ற ஆண்டு நேர்முகத் தேர்வின் இறுதி முடிவில் என் பெயர் இல்லாத போது மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதிலிருந்து என்னைத் தேற்றி அடுத்த ஆண்டு மீண்டும் பயிற்சியளித்து என்னை வெற்றி பெறச் செய்த அறம் ஐ.ஏ.எஸ். அகாடெமிக்கு நன்றிகள்” என்றார்.
60க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை இந்த ஆண்டும் தமிழகம் உருவாக்கி பெருமை அடைகிறது. இதனால் மாணவர்களிடையே இத்தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாகும் என்பதில் ஐயம் ஏது இல்லை.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment