கடின வினாத்தாள் காரணமாக, பிளஸ் 1 பொது தேர்வில், 40 சதவீத மாணவர்கள், &'ஜஸ்ட் பாஸ்&' என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வில், பெரும்பாலான வினாக்கள், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளின் வினாக்களை போல், நுண்ணறிவை ஆய்வு செய்யும் வகையில் இடம் பெற்றன. அதனால், பெரும்பாலான மாணவர்கள் விடை எழுத திணறினர்.
இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுக்கான, மொழிப்பாடத்துக்கு, ஒரு வாரத்திற்கு முன்பும், முக்கிய பாடங்களுக்கு, நேற்று முன்தினமும், விடைத்தாள் திருத்தம் துவங்கியது. இந்த விடைத்தாள் திருத்தத்தில், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன. விடைத்தாள் திருத்தத்திற்கான, விடைக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.ஒவ்வொரு கேள்வியிலும், சில குறிப்பிட்ட விடை அம்சம் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அதனால், &'சென்டம்&' என்ற, 100க்கு, 100 முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர் எண்ணிக்கை, பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.&'தமிழ் வழி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, தேர்ச்சி மதிப்பெண் குறைகிறது; 40 சதவீதம் பேர், &'ஜஸ்ட் பாஸ்&' மதிப்பெண் மட்டுமே பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் மட்டுமே, 70 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவர்&' என, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள், அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், &'இந்த ஆண்டு, பிளஸ் 1 வினாத்தாள் முறையை மாற்றியதால், வெறும் மனப்பாட கல்வி முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.&'நுண்ணறிவுடன், பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் மட்டுமே, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அரசு எதிர்பார்க்கும் தேர்ச்சி சதவீதம் குறையாது&' என்றனர்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
அரசு எதிர்பார்க்கும் தேர்ச்சி சதவீதம் குறையாதா ?? அடப்பாவிகளா இப்போ வரைக்கும் நா திருத்துன 20 பேப்பர்ல 6பேர் fail.. 4 பேருக்கு தர்ம பாஸ் போட்ருக்கேன்.. meethi10 பேர்ல 4 பேர் தான் 25கு மேல.. அப்புறம் எப்படி பாஸ் percentage increase ஆகும்.. ஒரு வேலை மார்க் என்ட்ரில பாஸ் போட்டுட்டு % increase ஆனதா காட்டுவானுங்கனு நெனைக்கிறேன்..
ReplyDelete