பருவத் தேர்வு முடிவுகளை மாணவர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அனுப்பும் முறையை அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி உமா கூறியதாவது: பல்கலைக்கழகத்தின் சார்பில் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட்ட 3, 5, 7 ஆகிய பருவத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை மாலை வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை www.annauniv.edu, coe1.annauniv.edu, coe2.annauniv.edu, aucoe.annauniv.edu ஆகிய இணையதளங்கள் மூலம் பார்த்துக் கொள்ளலாம். மேலும், பல்கலைக்கழக வரலாற்றில் முதன் முறையாக தமிழகம் முழுவதும் உள்ள 550 பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் செல்லிடப்பேசிகளுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment