Skip to main content

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? -தந்தி டிவி கருத்துக் கணிப்பு முடிவுகள்!

 

202103032134281638_Tamil_News_Tamil-News-TN-Assembly-Election-2021-Thanthi-TV-Opinion_SECVPF

சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர்.

கருத்துக் கணிப்பு

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல் இந்த முறையும் அதிமுக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேசமயம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் இந்த தேர்தலில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். 


இந்நிலையில், இந்த தேர்தலில் மக்களின் மனநிலை என்ன? என்பது தொடர்பாக பல்வேறு கேள்விகளுடன் தந்தி டிவி கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளது. பிப்ரவரி 2ம் தேதி முதல் 22ம் தேதிவரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

202103032134281638_1_opinion-poll2._L_styvpf

அதில், அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு இல்லை என்றே அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். நகர்ப்புறங்களைப் பொருத்தவரை அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 42 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 56 சதவீதம் பேரும் கூறியிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் உள்ள கணக்கெடுப்பின்படி, அதிமுக அரசு மீண்டும் ஆட்சிக்கு வர வாக்களிப்போம் என 45 சதவீதம் பேரும், வாக்களிக்க மாட்டோம் என்று 50 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.


இதேபோல் திமுக ஆட்சிக்கு வர வாக்களிப்பீர்களா? என்ற கேள்விக்கு 48 சதவீதம் பேர் ஆம் என்றும், 46 சதவீதம் பேர் இல்லை என்றும் கருத்து பதிவிட்டுள்ளனர். 6 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை. 


சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற யாருக்கு வாய்ப்பு அதிகம்? என்ற கேள்விக்கு திமுக கூட்டணிக்கு ஆதரவாக 47 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 41 சதவீதம் பேரும், கடும் போட்டி இருக்கும் என 11 சதவீதம் பேரும், மற்றவர்களுக்கு வாய்ப்பு என ஒரு சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


உங்களின் முதலமைச்சர் தேர்வு யார்? என்ற கேள்விக்கு மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக 47 சதவீதம் பேரும், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக 42 சதவீதம் பேரும் கருத்து பதிவிட்டுள்ளனர். சீமான் 4 சதவீதம், கமல் 2 சதவீதம், டிடிவி தினகரன் 1 சதவீதம், மற்றவர்கள் 4 சதவீதம் ஆதரவை பெற்றுள்ளனர். முதலமைச்சரின் செயல்பாடு எப்படி? என்ற கேள்விக்கு நன்று என 37 சதவீதம் பேரும், சரியில்லை என 43 சதவீதம் பேரும், சராசரியாக இருப்பதாக 20 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.


2021 தேர்தல் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சி ஆட்சி அமைக்கும் என்று 49 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு ஆதரவாக 41 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தொங்கு சட்டமன்றம் அமையும் என்று 10 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.


அதிமுக அரசின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா? என்ற கேள்விக்கு இல்லை என அதிகம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். இல்லை என 52 சதவீதம் பேரும், ஆம் என 44 சதவீதம் பேரும் கூறி உள்ளனர். 4 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.


சசிகலாவின் அரசியல் வருகை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்விக்கு இல்லை என 51 சதவீதம் பேரும், ஆம் என 40 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர். 9 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்கவில்லை.


சசிகலாவின் அரசியல் நகர்வால் என்ன நடக்கும்? என்ற கேள்விக்கு, நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு பாதகமான தாக்கம் ஏற்படும் என்று 68 சதவீதம் பேர் கருத்து தெரிவித்தனர். அதிமுகவுக்கு சாதகம் என 11 சதவீதம் பேரும், திமுகவுக்கு சாதகம் என 14 சதவீதம் பேரும், திமுகவுக்கு பாதகம் என 7 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.


இந்த ஒட்டுமொத்த கருத்துக் கணிப்புகளைப் பார்க்கையில் எதிர்க்கட்சியான திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு உள்ளதையே காட்டுகிறது. அதேசமயம், ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையிலான இடைவெளி மிக குறைவாகவே உள்ளது. எனவே, தொகுதி பங்கீடு முடிந்து, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டபின்னர், கள நிலவரத்தில் மாற்றம் ஏற்படலாம்

Comments

  1. Mam Stalin cm a vantha tet la yethuvum matram vara vaippu irukka

    ReplyDelete
    Replies
    1. Varum entru numbuvathai thavira namaku vera option illa .8 years ah nambinom so

      Delete
    2. May be employment ku edhavathu weightage kudupanga..

      Delete
  2. Varum aanaa varaathuuuu...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here